பத்திரிகை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமான ஆள்.
எந்த டாப்பிங் பற்றி பேச ஆரம்பித்தாலும்
அபாரமாக பேச ஆரம்பித்துவிடுவார். இன்றும் தேசீயம், அரசியல் என்று பேசிக்
கொண்டிருக்கையில் ஜெய் ஹிந்த் என்ற எழுச்சி வாசகம் பக்கம் சென்றது. ஜெய் ஹிந்த் வாசகம் முதன் முதலில்
சொல்லியவர் யாரென்று தெரியுமா? என ஆரம்பித்தார்.
சுபாஷ் சந்திரபோஸ் என்பது அனேகருக்கு தெரிந்த சங்கதிதானே! அதையே
நானும் சொன்னபோது, சிரித்துக் கொண்டே இல்லை என்றார்.
தானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்ததாகவும் ரகமி
என்ற வரலாற்று ஆசிரியர் ஜெய் ஹிந்த் செண்பகராமன் என்ற நூல் எழுதியிருப்பதாகவும் அதிலேயே தான் ஜெய் ஹிந்த் பற்றி
தெரிந்து கொண்டேன் என்றும் சம்பவத்தை
சொல்ல ஆரம்பித்தார்.
குமரியில்
பிறந்த செண்பகராமன்சில காலத்திற்கு பின் திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை
முடித்திருக்கிறார். மாணவராக இருந்த
காலங்களிலேயே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார் செண்பகராமன். ஜெர்மன் நாட்டு உளவாளியான சேர் வால்டர்
வில்லியம் ஸ்ரிக்லாண்ட் செண்பகராமன்
நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலையும், ஆர்வத்தையும் கண்டு
பலவகைகளில் உதவி செய்தார்.
இந்தியாவில்
இருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, சுவீட்சர்லாந்து, ஜெர்மன் நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்த போது இத்தாலிய
இலக்கியம், விஞ்ஞானம் படித்திருக்கிறார். பின்
சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொடர்ந்திருக்கிறார்.
அதன்பின் ஜெர்மனியின் தலைநகரான பெர்லியனில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
பட்டப்படிப்பு முடித்த பின் செண்பகராமன் ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே
இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி மூலம்
தாய் நாட்டு விடுதலைக்கு ஆதரவு திரட்டத் தொடங்கினார்.அந்த
காலக்கட்டத்தில் தான் ஜெர்மனி வேந்தர் கெய்சரின் நட்பு கிடைத்திருக்கிறது செண்பகராமனுக்கு. 1930-இல் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன்
நியமிக்கப்பட்டார். அதிலிருந்து 1933-வரையில் அரசியலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது செண்பகராமனுக்கு.1933-இல் ஹிட்லர் ஆட்சி ஏற்பட்ட
போது அவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது
செண்பகராமனுக்கு.
1933-இல் வியன்னா நடைப்பெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸை
முதன்முறையாக சந்திக்கிறார். செண்பகராமன்
இந்திய தேசியத் தொண்டர் படை திட்டம் பற்றி கேள்விப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய இந்திய தேசீயப்
படை குறித்து கலந்தாலோசித்து இருக்கிறார்.
அச்சந்திப்பின் முடிவில் தான் செண்பகராமன் எப்போதும் தான்
சொல்லும் ஜெய் ஹிந்த் என்ற மந்திர வார்த்தையை உச்சரித்து இருக்கிறார். அச்சொல் சுபாஷ் சந்திரபோஸ்
அவர்களுக்கு வெகுவாக ஈர்க்கவே தன்னுடைய
தேசீயப்படையின் தாரக மந்திரமாக்கினார். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.
நண்பர்
சொல்லி முடித்தபோது ரகமியின் ஜெய் ஹிந்த்
செண்பகராமன் புத்தகத்தை வாசித்துப்
பார்க்க
வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
செண்பகராமனைப்
பற்றி இன்னொரு சம்பவத்தை சொல்லிய போது பெரும் ஆச்சரித்தையே ஏற்படுத்தியது.
ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது
"சுதந்திரம் பெறக் கூடிய தகுதி
இந்தியர்களுக்கு கிடையாது" என்று சொன்னார். அருகில் இருந்த செண்பகராமனுக்கு கோபத்தை ஏற்படுத்த இந்தியாவின்
பாரம்பரியம் இந்தியத்தலைவர்களின்
திறமைகளைப் பற்றி பேசி இந்தியர்களை தரங்குறைந்தவர்களாக நினைக்காதீர்கள் என்று ஆவேசமாக மற்றவர் முன்னணியில் ஹிட்லரிடம் விவாதித்திருக்கிறார்.
ஹிட்லர்
தன்னை மன்னித்துக் கொள்ளும்படி கேட்க
செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்ல
அதன்படியே செய்திருக்கிறார் ஹிட்லர்.
இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை கொடுக்க, செண்பகராமனை கொல்ல சாப்பாட்டில்
விஷத்தை வைத்து சதி செய்து கொன்றனர். செண்பகராமன் மே 26, 1934-இல் இறந்திருக்கிறார். ஹிட்லரிடம் எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?
"தொட்டிலில் அழும் பிள்ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்" என
ஜெர்மனியில் சொல் வழக்கு உண்டு. அறிவில்
சிறந்தும் துணிவில் ஈடு இணையற்ற ஓர் தமிழனாக ஜெர்மனியில் இருந்து இந்திய சுதந்திரத்திற்கு போராடிய மாவீரன் செண்பகராமனைப் பற்றி ரகமி ஜெய் ஹிந்த் புத்தகத்தில் பல
அருமையாக நிகழ்ச்சிகளையும் வெளி
உலகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.
செண்பகராமனைப் போல் வரலாறுகளில் மறைக்கப்பட்ட பல மாவீரர்களை நினைக்கும்
போது, அழுவாச்சி ஆட்டம் நடத்தியவர்களெல்லாம் அகிம்சைவாதிகளாகவும், சோணங்கிகளெல்லாம் சுதந்திர
வீரர்களாகவும், அகிம்சையில் வென்ற இந்தியச் சுதந்திரம்
என்று பீற்றிக் கொள்வதில் இருக்கும் நிகழ்கால
இந்தியாவின் மீது பெருங்போபமே எழுகிறது.
இந்திய
சுதந்திரத்திற்காக வெளி நாடுகளில் இருந்து ஆயுதம் தாங்கி போராடிய போராளிகளை
தீவிரவாதிகள் என்றவர்களல்லவா அகிம்சைவாதிகள்?
தமிழச்சி வலை தளத்தில் இருந்து
23/06/2009
No comments:
Post a Comment